# நிதி (வழிவகைகள்-II )த் துறை - செய்தி வெளியீடு

> தமிழ்நாடு அரசு, 3000 கோடி ரூபாய் மதிப்பிலான பிணையப் பத்திரங்களை இந்திய ரிசர்வ் வங்கியால் மே 12, 2026 அன்று மும்பையில் நடத்தப்படும் ஏலத்தின் மூலம் மறுவெளியீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
- **Published**: 2026-05-08
- **URL**: https://news.nammamap.in/press-release/21701-finance-ways-and-means-ii

---

தமிழ்நாடு அரசு ரூபாய் 3000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் மறுவெளியீடு செய்யவுள்ளது.

7.50 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2032 (ரூபாய் 1000 கோடி), 7.73 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2036 (ரூபாய் 1000 கோடி) மற்றும் 7.80 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041 (ரூபாய் 1000 கோடி) ஆகியவை மறுவெளியீடு செய்யப்பட உள்ளன.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் மே 12, 2026 அன்று நடத்தப்படும்.

போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணி வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணி வரை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஏலக்கேட்புகள் இந்திய ரிசர்வ் வங்கியின் E-Kuber முறை மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)