# மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காவினை ஆய்வு மற்றும் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் விளையாட்டு கோப்பை அறிவிப்பு.

> மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் கோபாலபுரம், நுங்கம்பாக்கம் மற்றும் கில்நகர் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காவினை ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் 'முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் விளையாட்டு கோப்பை' என்ற பெயரில் மூன்று நாட்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தார்.
- **Published**: 2026-05-17
- **URL**: https://news.nammamap.in/press-release/21744-speaker-announces-chief-minister-sports-cup

---

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் கோபாலபுரம், நுங்கம்பாக்கம் மற்றும் கில்நகர் விளையாட்டு மைதானங்கள் மற்றும் கில்நகர் பூங்காவினை ஆய்வு மேற்கொண்டார்.

விளையாட்டு மைதானங்களில் மழைநீர் அகற்றுதல், தாழ்வான பகுதிகளை சீர்செய்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் கிரிக்கெட் வலை பயிற்சி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கில்நகர் பூங்காவில் யோகா மேடைக்கு மேற்கூரை அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் மற்றும் கழிவறை வசதிகளை மேம்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் 'முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் விளையாட்டு கோப்பை' பெயரில் மூன்று நாட்கள் அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, கோப்பையும் பரிசுகளும் வழங்கப்படும் என அறிவித்தார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)