# திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அலுவலர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்திட வேண்டும்; ஆய்விற்கு பின், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் உத்தரவு மற்றும் யானை அகிலாவுக்கு 24வது பிறந்தநாள் விழா.

> மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள முக்கிய திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு, பிரசாத விற்பனை நிலையங்கள், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், FSSAI விதிமுறைகளை கட்டாயமாக்க உத்தரவிட்டார். யானை அகிலாவின் 24வது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்றார்.
- **Published**: 2026-05-24
- **URL**: https://news.nammamap.in/press-release/21791-minister-orders-temple-prasadam-food-safety-inspection

---

திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அலுவலர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்திட வேண்டும்.

உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறல்கள் கண்டறியப்பட்டால் பிரசாத கடை ஒப்பந்ததாரர்கள் மற்றும் நடத்துபவர்களிடம் விளக்கம் கோரப்பட்டு, விற்பனை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அமைச்சர் அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தகுதியான அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே கடைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

குடிநீர் சுத்திகரிப்பு ஆலை (RO Unit) TDS அளவு குறைவாக இருப்பின், தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் தனிப் பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.

கழிப்பறைகள் தினமும் குறைந்தது ஐந்து முறை சுத்தம் செய்யப்பட்டு, சுத்தம் செய்த நேரம் மற்றும் பணியாளர் விவரங்களுடன் தனிப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

இலவச காலணி பாதுகாப்பு மையங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

புதிய அம்பாள் மரத்தேர் மற்றும் ராஜகோபுரம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து திருக்கோயில்களிலும் FSSAI வழிகாட்டுதல்கள், உணவுப் பாதுகாப்பு தரநிலைகள், சுகாதார நடைமுறைகள் மற்றும் குடிநீர் தரக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.

இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் இம்முடிவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)