# தமிழ்நாடு அரசு ரூபாய் 2500 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை

> தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2500 கோடி மதிப்புள்ள பங்குகளை இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் ஜூன் 2, 2026 அன்று நடத்தப்படும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
- **Published**: 2026-05-27
- **URL**: https://news.nammamap.in/press-release/21837-tamil-nadu-government-sell-securities-2500-crore

---

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்யவிருப்பதாக அறிவிப்பு.

இதில் ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள 7 ஆண்டுகால பிணையப் பத்திரம், ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள 10 ஆண்டுகால பிணையப் பத்திரம் மற்றும் ரூபாய் 500 கோடி மதிப்புள்ள 15 ஆண்டுகால பிணையப் பத்திரம் ஆகியவை அடங்கும்.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜூன் 2, 2026 அன்று நடத்தப்படும்.

போட்டி ஏலக்கேட்புகள் ஜூன் 2, 2026 அன்று முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

போட்டியற்ற ஏலக் கேட்புகள் ஜூன் 2, 2026 அன்று முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஏலக்கேட்புகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மூலம் (மின்னணு வடிவில்) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)