# மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் தமிழக சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்தார்

> தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்காரி அவர்களை சந்தித்து, மாநிலத்தின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திட்டங்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.
- **Published**: 2026-06-02
- **URL**: https://news.nammamap.in/press-release/21876-aadhav-arjuna-nitin-gadkari-tamil-nadu-road-projects

---

சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் சாலை பாதுகாப்புக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்துதல்.

சாலை விபத்துகள் அதிகம் உள்ள பகுதிகளில் ரோந்து வாகனங்கள், அவசர கால ஊர்தி சேவைகளை அதிகரித்தல், விபத்து சிகிச்சை மருத்துவமனைகள் அமைத்தல், பாதுகாப்பான யூ-திருப்பங்களை ஏற்படுத்துதல்.

சுமார் 1500 கி.மீ. நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாக மேம்படுத்த சிறப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்.

செங்கல்பட்டு - திண்டிவனம் (NH-32) பகுதியை 6 / 8 வழிச்சாலையாக விரிவாக்குதல்.

கோயம்புத்தூர் புறவழிச்சாலை (நீலாம்பூர்-மதுக்கரை, NH-544) 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல்.

திருச்சி (பஞ்சப்பூர்) - ஜீயபுரம் - கரூர் (NH-81) 6 வழிச்சாலையாக மேம்படுத்துதல்.

கரூர் - கோயம்புத்தூர் (NH-81) பகுதியை சேவைச் சாலையுடன் அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட 6 வழிச்சாலையாக அமைத்தல்.

மாதவரம் - சோழவரம் (NH-16) உயர்மட்டச் சாலை அமைத்தல்.

மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் (NH-48) உயர்மட்டச் சாலை அமைத்தல்.

உப்பிலிபாளையம் மேம்பால சுற்றுச்சாலையை அகலப்படுத்துதல்.

2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய சாலை மற்றும் உட்கட்டமைப்பு நிதிப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)