# தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்தித்து முக்கிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களை முன்மொழிந்தார்

> தமிழ்நாட்டின் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்து, 2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல், பல்வேறு விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையங்களை நிறுவுதல் மற்றும் மாநிலம் முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை முன்மொழிந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டை முன்னணி விளையாட்டு மாநிலமாக உயர்த்துவதே நோக்கம்.
- **Published**: 2026-06-03
- **URL**: https://news.nammamap.in/press-release/21881-adhav-arjuna-mansukh-mandaviya-sports-initiatives

---

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கான முன்மொழிவு.

திருச்சி ஒலிம்பிக் அகாடமி வளாகத்தில் (48 ஏக்கர்) தற்காப்புக் கலைகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைத்தல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைத்தல்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான UCI அங்கீகாரம் பெற்ற உள்ளரங்க மிதிவண்டி தடம் 'வெலோட்ரோம்' மற்றும் தேசிய மிதிவண்டி உயர்செயல்திறன் மையம் அமைத்தல்.

புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 400 மீட்டர் சர்வதேச தரத்திலான செயற்கை ஓடுதளங்கள் அமைத்தல்.

கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் வளாகங்கள் அமைத்தல்.

கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, இராணிப்பேட்டை மற்றும் கடலூரில் பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் அமைத்தல்.

சென்னையில் சர்வதேச தரத்திலான ஏறு விளையாட்டு பயிற்சி மையம் அமைத்தல்.

'கேலோ இந்தியா மையங்கள்' மற்றும் 'கேலோ இந்தியா மாவட்ட மையங்களை' மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 2 விளையாட்டுப் பிரிவுகளுடன் விரிவாக்கம் செய்தல்.

சென்னையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு மையம் அமைத்தல்.

மதுரையில் தேசிய விளையாட்டு மையம், விளையாட்டு மருத்துவம், காயம் மீட்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு மையத்திற்கான முன்மொழிவு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)