# அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவு

> மாண்புமிகு அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் சேவை மேம்பாடு மற்றும் வருவாய் இலக்குகளை அடையவும் அறிவுறுத்தப்பட்டது.
- **Published**: 2026-06-09
- **URL**: https://news.nammamap.in/press-release/21924-orders-market-guideline-value-land-survey-numbers

---

அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளை சரிவர பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆவணங்களை தாமதமின்றி அன்றைய தினமே பொதுமக்களிடம் திரும்ப வழங்க வேண்டும்.

பதிவு சம்மந்தமாக எழும் சந்தேகங்களை உடனுக்குடன் புரியும்படியும் பொறுமையுடனும் எடுத்துக்கூற வேண்டும்.

எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் செயல்பட வேண்டும்.

கட்டிட களப்பணிக்கான ஆவணங்களை தாமதமில்லாமல் உடனுக்குடன் பார்வையிட்டு ஆவணதாரர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்.

நிலுவை ஆவணங்களை மாவட்டப்பதிவாளர்கள் ஆய்வு செய்து உடனுக்குடன் உரிய தீர்வு அளித்திட வேண்டும்.

2026-2027 ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை அடைய அனைத்து முயற்சிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

தேவையில்லாத காரணங்களுக்காக ஆவணங்களை நிலுவை வைத்து பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது.

பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்களை சரிபார்த்து பதிவு செய்து வழங்க வேண்டும்.

முழுமையான அர்ப்பணிப்புடனும் முழு ஈடுபாடுடனும் தன்னலமற்று பணியாற்ற வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)