# குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் அரசு திட்டங்களின் முன்னேற்பு பணிகள் குறித்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா அவர்கள் ஆய்வு

> மாண்புமிகு அமைச்சர் பெ. மதன் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், MSME திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட அதிக பயனாளிகளை அடையாளம் காணவும், மாற்றுத்திறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கவும், அனைத்து இலக்குகளையும் டிசம்பருக்குள் அடையவும் அவர் வலியுறுத்தினார்.
- **Published**: 2026-06-10
- **URL**: https://news.nammamap.in/press-release/21936-madan-raja-reviews-government-schemes-preparations

---

கடந்த ஆண்டை விட அதிக அளவில் பயனாளிகளை கண்டறிந்து தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும்.

அதிக அளவில் விழிப்புணர்வு கூட்டங்களை அந்தந்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்த வேண்டும்.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிக எண்ணிக்கையில் கடன் வழங்கப்பட வேண்டும்.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம், குறுந்தொழில்கள் முறைப்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக அதிகபடியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டங்களின் இலக்குகளை எய்திடும் வகையில் துரிதமாக செயல்பட வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட அனைத்து நிறுவனங்களும் உற்பத்தி தொடங்கிட வழிவகை செய்ய வேண்டும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)