# சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ. 28 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 விளையாட்டு அரங்கள் மற்றும் மைதானங்களை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா திறந்து வைத்து 5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்

> சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ. 28 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 விளையாட்டு அரங்கள் மற்றும் மைதானங்களை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா திறந்து வைத்து 5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்
- **Published**: 2026-06-23
- **URL**: https://news.nammamap.in/press-release/22020-aadhav-arjuna-inaugurates-sports-arenas-awards-athletes-tamil-nadu

---

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ. 28.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 10 விளையாட்டு அரங்கங்கள் மற்றும் மைதானங்கள் திறப்பு.

5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அரியலூர் மற்றும் திருவண்ணமாலை மாவட்டங்களில் ரூ.20.30 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கையிழை ஹாக்கி மைதானம் திறப்பு.

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.3 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரா விளையாட்டரங்கம் திறப்பு.

ரூ. 2.46 கோடி மதிப்பில் முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு அரங்கங்கள் திறப்பு.

திருப்போரூரில் 120 ஏக்கரில் ஒலிம்பிக் சர்வதேச மைதானம் உருவாக்கப்படும்.

கள்ளக்குறிச்சியில் மலைவாழ் மக்களுக்காக ஒலிம்பிக் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

6,000 பேர் அடையாளம் காணப்பட்டு, வெளியாட்டு பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

ஜூன் 26 அன்று Anti-Drug விழிப்புணர்வு ஓட்டம் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும்.

செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீக்கு ரூ. 10 லட்சத்திற்கான உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

23 வயது உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ள சாம் வசந்த், கிர்த்திகா, அக்ஷயா, ஜாநிஸ் ஸ்டெல்லா ஆகியோருக்கு தலா ரூ.75,000-க்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

அடுத்த ஒரு வருடத்தில் தமிழ்நாட்டில் விளையாட்டு வளர்ச்சி அடைய வேண்டும்.

1.25 கோடி மாணவர்களுக்கு விஷன் அளிக்கப்படும், 6,000 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.

விளையாட்டில் பெண்கள், ஆண்கள் என்ற வேறுபாடுகளை நீக்க கொள்கை உருவாக்கப்படும்.

விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு பரிசுத் தொகை வழங்கப்படாவிட்டால் அது குற்றமாக கருதப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

விளையாட்டை ஒரு தனிப் பாடமாக அறிமுகப்படுத்தப்படும்.

இருக்கும் விளையாட்டு மைதானங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)