# மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 28 ஜூன் 2026 அன்று

> தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 28 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 43,051 மையங்களில் நடைபெறவுள்ளது. 0-5 வயதுடைய 52.91 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- **Published**: 2026-06-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22044-national-polio-drops-special-camp

---

தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் 28 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்.

0-5 வயதுடைய 52.91 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்கள் செயல்படும்.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஏற்கனவே சொட்டு மருந்து பெற்றிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் வழங்கப்பட வேண்டும்.

முக்கிய போக்குவரத்து நிலையங்களில் தற்காலிக மையங்கள் (Transit Booths) 29.06.2026 மற்றும் 30.06.2026 ஆகிய தேதிகளிலும் செயல்படும்.

சொட்டு மருந்து மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் தொலைதூர மற்றும் மலைவாழ் பகுதி குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

பிறமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இம்முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)