# அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்ப்பு

> அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 5 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு, 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
- **Published**: 2026-08-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22321-tamil-nadu-cm-100-days-investment-projects-jobs

---

அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1,02,514 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

4,476 கோடி ரூபாய் முதலீட்டில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

2,676 கோடி ரூபாய் முதலீட்டில் 5 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

777.74 கோடி ரூபாய் செலவில் சிப்காட், டிட்கோ, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் 2 திட்டங்கள் மற்றும் 13 புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன.

9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (தூத்துக்குடி), அக்னிகுல் காஸ்மோஸ் (தூத்துக்குடி), அல்ட்ராவயலட் (கிருஷ்ணகிரி), சூப்பர் மைக்ரோ (சென்னை), YKK (திருவள்ளூர்), ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ், ஆவிட் குழுமம், பிட்சர் (காஞ்சிபுரம்), JK டயர் (காஞ்சிபுரம்), டைம்லர் (காஞ்சிபுரம்) போன்ற நிறுவனங்களின் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உயிரியல் அறிவியல், வாகன உற்பத்தி, மின்னணுவியல், குறைக்கடத்திகள், ஆழ்தொழில்நுட்பம், நுகர்வோர் மின்னணுவியல், ஜவுளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு, கடல்சார் தொழில்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடுகள் ஈர்க்கப்படும்.

போஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும்.

WOWsemi நிறுவனம் கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும்.

தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டங்களில் பெண் பணியாளர்களுக்கான மகளிர் தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)