# காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.164.64 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 127 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 36 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 164 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
- **Published**: 2026-08-27
- **URL**: https://news.nammamap.in/press-release/22399-cm-inaugurates-police-fire-department-buildings-tamil-nadu

---

காவல் துறை சார்பில் ரூ.127.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.36.88 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு

மொத்தம் ரூ.164.64 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கத்தில் 400 காவலர் மற்றும் தலைமைக் காவலர் குடியிருப்புகள் திறப்பு

சென்னை மாவட்டம், துறைமுகத்தில் காவல் நிலையம் திறப்பு

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவலர் பல்பொருள் அங்காடி திறப்பு

சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் திறப்பு

கோயம்புத்தூர், நாமக்கல் மாவட்டங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான குடியிருப்புகள் திறப்பு

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான படைக் குடியிருப்பு திறப்பு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)