# காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு

> முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் ஆகிய மூன்று முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்தார்.
- **Published**: 2026-08-31
- **URL**: https://news.nammamap.in/press-release/22423-chief-minister-announces-three-major-infrastructure-projects

---

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிப்காட் மூலம் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும். இது 2000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 5000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

கோயம்புத்தூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் ஏற்படுத்தப்படும்.

திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ஆய்வு மற்றும் திட்ட அறிக்கை தயாரித்து பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)