# செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்

> செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
- **Published**: 2026-09-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22440-elderly-disabled-home-delivery-pds-items

---

65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

சென்னையில் உள்ள ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1,346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)