#Justice
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Justice குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
செய்தி வெளியீடு: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்குற்றச் செயலுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தண்டனையை வரவேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இரட்டை தூக்குத் தண்டனை விதித்த தீர்ப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வரவேற்றுள்ளார்.
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட துயரம் குறித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் சமூக வலைதளப் பதிவு
கோயம்புத்தூரில் 10 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார். இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு விரைவான விசாரணை மற்றும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதி பூண்டுள்ளது.