குறிச்சொல் செய்திகள்
#Public Sector Undertaking
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Public Sector Undertaking குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 ஜூன், 2026PR #291
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி. இந்தியா) இந்திய அரசின் பங்குகளை, 2% அடிப்படை பங்குகள் மற்றும் 1% கூடுதல் பங்குகள் ஒதுக்கீட்டு விருப்பம் உள்ளிட்ட 3% வரையிலான 'விற்பனைக்கான சலுகை' மூலம் விற்பனை செய்யும் முடிவுகுறித்து தமிழ்நாடு அரசின் வருத்தத்தைத் தெரிவிக்கும் முகமாக, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.