அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Anjalai Ammal
Anjalai Ammal தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
1 ஜூன், 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (1.6.2026) சென்னையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அஞ்சலை அம்மாளின் தியாக வாழ்க்கை, குறிப்பாக நீல் சிலை அகற்றும் போராட்டம், சட்டமறுப்பு மறியல் போராட்டம், தனிநபர் சத்தியாகிரக போராட்டம், அந்நியத்துணி புறக்கணிப்புப் போராட்டம், நெசவாளர்கள் போராட்டம் போன்றவற்றில் அவரது பங்கேற்பு, கடலூர் மாகாண சட்டமன்ற உறுப்பினராக அவரது தேர்வு, மற்றும் மகாத்மா காந்தியால் 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என அழைக்கப்பட்டது போன்றவை எடுத்துரைக்கப்பட்டுள்ளன.