TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு அறிவிப்புகள்

முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின் மூன்று முக்கிய அரசாணைகளுக்கு கையொப்பமிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று முக்கிய அரசாணைக் கோப்புகளில் கையொப்பமிட்டார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் இன்று (10.05.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று முக்கிய அரசாணைக் கோப்புகளில் கையொப்பமிட்டார். இந்த அரசாணைகளின்படி, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும். பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பாதுகாப்பினை மேம்படுத்தவும் 'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை' மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். மேலும், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க, மாநிலம் முழுவதும் 65 'போதைப் பொருட்கள் தடுப்புப் படை' அலகுகள் அமைக்கப்படும்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.
  • 2
    பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், போதுமான ஆளிநர்கள் / பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய 'சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை' மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 3
    தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) அமைக்கப்படும்.

Related Announcements & Press Releases