பயிற்சித் துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் ஆய்வு
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் தலைமையில் பயிற்சித்துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அடிப்படை, பணியிடை மற்றும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கான பயிற்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. திறன் மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பப் பயிற்சிகள், அத்துடன் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் மூலம் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (12.06.2026) சென்னை அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில், மாண்புமிகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் அவர்கள் தலைமையில் பயிற்சித்துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பயிற்சித்துறையின் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைப்பயிற்சி, பணியிடைப்பயிற்சி, மற்றும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்க அறிவுறுத்தினார். மேலும், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு பயிற்சியினையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியிலுள்ள பயிற்சி வகுப்பறைகள், பயிற்சியாளர்கள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு பயிற்சியில் பங்கேற்ற அரசு அலுவலர்களுடன் பயிற்சி குறித்து கலந்துரையாடினார். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அரசு அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சியினை முறையாக மேற்கொண்டு திறம்பட பணியாற்றி மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என தெரிவித்தார். மேலும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்திலுள்ள பயிற்சி வகுப்பறைகள், தேர்வர்கள் தங்கும் விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு தேர்வர்களுடன் பயிற்சி குறித்து கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது மனிதவள மேம்பாட்டுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரி, இயக்குநர்/பயிற்சித்துறை தலைவர் திரு. ச. கோபால சுந்தரராஜ், இ.ஆ.ப.,, கூடுதல் இயக்குநர்கள், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சிகள் வழங்க அறிவுறுத்தல்
- 2போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு பயிற்சியினையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை