#Artificial Intelligence
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Artificial Intelligence குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ICT அகாடமி, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் (CSR) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது
மத்திய, மாநில அரசு மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியான ICT அகாடமி, தமிழ்நாட்டில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் (CSR) அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதன் மூலம் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய மையமாக மாறும்.
மூன்று நாட்கள் "செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்" பயிற்சித் திட்டம்
சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), ஆகஸ்ட் 4 முதல் 6, 2026 வரை மூன்று நாட்கள் "செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்" பயிற்சித் திட்டத்தை EDII, சென்னையில் நடத்துகிறது.
மூன்று நாள் “செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்” பயிற்சித் திட்டம்
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை, ஜூன் 23 முதல் ஜூன் 25, 2026 வரை EDII, சென்னையில் 'செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அடிப்படைகள்' குறித்த மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்கிறது.
பயிற்சித் துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் ஆய்வு
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் தலைமையில் பயிற்சித்துறையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அடிப்படை, பணியிடை மற்றும் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கான பயிற்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. திறன் மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பப் பயிற்சிகள், அத்துடன் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் மூலம் தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் தலைமையில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டை தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடமாக உயர்த்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் வளர்ச்சி, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (19.05.2026) நடைபெற்றது.