ஆதிதிராவிடர் நல இயக்குநரகம்: சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-2027
2026-27 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள ஊராட்சிகள் தங்களது விண்ணப்பங்களை ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31.07.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவான சுருக்கம்
சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையும் அதனுடன், சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. இதனடிப்படையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான 'சமூக நல்லிணக்க ஊராட்சி' விருது பெற விரும்பும் ஊராட்சிகள் விண்ணப்ப படிவத்தினையும், அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31.07.2026க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்ப படிவத்தினை https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social_award_app_26_27.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
முக்கிய அறிவிப்புகள்
- 12026-27 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- 2விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31.07.2026 ஆகும்.
- 3இந்த விருது சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் தகுதிவாய்ந்த 10 ஊராட்சிகளுக்கு ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் விருதை உள்ளடக்கியது.
- 4விண்ணப்பப் படிவத்தை https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/social_award_app_26_27.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களில் பெறலாம்.