TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
வேளாண்மை மற்றும் பாசனம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள 4 கால்வாய்களின் கீழுள்ள 10265 ஏக்கர் நேரடி பாசனப்பரப்பு நிலங்களுக்கு, கார் பருவ சாகுபடிக்கு 01.06.2026 முதல் 02.10.2026 வரை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய் மற்றும் கன்னடியன் கால்வாய் ஆகிய 4 கால்வாய்களின் கீழுள்ள 10265 ஏக்கர் நேரடி பாசனப்பரப்பு நிலங்களுக்கு, கார் பருவ சாகுபடிக்கு 01.06.2026 முதல் 02.10.2026 முடிய (124 நாட்கள்) 1710.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்களிலுள்ள 10265 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்புக்கு அனுமதி.
  • 2
    01.06.2026 முதல் 02.10.2026 முடிய (124 நாட்கள்) 1710.83 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும்.
  • 3
    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள வடக்கு கோடைமேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் கால்வாய்களின் கீழ் வரும் 10265 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

Related Announcements & Press Releases