#Tirunelveli
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tirunelveli குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக 2,548.94 ஏக்கர் நிலங்களுக்கும், கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில் வடமலையான்கால் மூலம் மேலும் 3,231.97 ஏக்கர் நிலங்களுக்கும், ஆக மொத்தம் 5,780.91 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செ. கமலி கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய மாணவியர் விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி செ. கமலி அவர்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்காக புதிதாகக் கட்டப்பட்ட மாணவியர் விடுதிக் கட்டடங்களை சென்னை, மாதவரத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.931.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதிகள், மாணவியர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்கி கல்வி பயில அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கோதையாறு பாசன திட்டத்திற்காக தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் 17,000 ஏக்கர் நிலங்களுக்கு பயன் பெறும் வகையில், 2026 ஜூன் 16 முதல் 138 நாட்களுக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I, சிற்றார் II அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தாமிரபரணி நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 36,521 ஏக்கர் நிலங்கள் கார் பருவ சாகுபடிக்கு பயனடைய பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து 121 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள 4 கால்வாய்களின் கீழுள்ள 10265 ஏக்கர் நேரடி பாசனப்பரப்பு நிலங்களுக்கு, கார் பருவ சாகுபடிக்கு 01.06.2026 முதல் 02.10.2026 வரை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.