#Public Service
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Public Service குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைந்து மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 ரோந்து வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவு
மாண்புமிகு அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் சேவை மேம்பாடு மற்றும் வருவாய் இலக்குகளை அடையவும் அறிவுறுத்தப்பட்டது.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த. லோகேஷ் தமிழ்செல்வன் இன்று (04-06-2026) மதுரை மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களில் ஆவணப் பதிவுகளுக்காக பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வுக்கூட்டம்: மக்கள் நலன் மற்றும் திறமையான சேவை வழங்கலை அமைச்சர் திருமதி.செ.கமலி வலியுறுத்தினார்
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், துறையின் தற்போதைய செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் சேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. கால்நடை மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு, இத்துறையின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தி, மக்கள் நலனை முதன்மைப்படுத்தி நேர்மையுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி ஆற்றிய உரை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 12.05.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் புதிய சபாநாயகர் திரு. ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் திரு. எம். ரவிசங்கர் ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பேரவையின் பொறுப்பு குறித்து அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மனநல ஆலோசனை சேவை, 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் வழங்கப்படுகிறது.