TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

துறை வாரியான அறிவிப்புகள்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

அரசு மருத்துவமனைகள், காப்பீட்டு திட்டங்கள் (CMCHISTN), மருத்துவ பணியாளர் தேர்வு மற்றும் பொது சுகாதார அறிவிப்புகள்.

19 ஆக., 2026

விதி 110-ன் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை குறித்த முதலமைச்சரின் அறிவிப்புகள்

முதலமைச்சர் சுகாதாரத் துறையில் பல புதிய முன்முயற்சிகள் மற்றும் மேம்பாடுகளை அறிவித்தார், இதில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை உயர்வு, புதிய மருத்துவ வசதிகள், மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிப்பு மற்றும் விரிவான புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் ஆகியவை அடங்கும்.

4 ஆக., 2026PR #489

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ரூ.113 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக 113 கோடி ரூபாய் செலவில் அறந்தாங்கி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆத்தூர், மரக்காணம் மற்றும் வளவனூர் அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதிரியக்க சிகிச்சை மையம், புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 12 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2 வட்டார பொது சுகாதார அலகுகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, நவீன மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார்.

14 ஜூலை, 2026PR #389

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-ll) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி மதிப்பிலான மருத்துவக் கட்டடங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

8 ஜூலை, 2026PR #363

மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கோ.க. அருண்ராஜ் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதார சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கான "நலம்AI" என்ற உரையாடலுடன் கூடிய செயலியை அறிமுகப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, அலைபேசி சார்ந்த மருத்துவப் பயனாளர் சேவைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் வழங்கப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கோ.க. அருண்ராஜ் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் "நலம்AI" வாட்ஸ்ஆப் சாட்போட், மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (E-ICU) மற்றும் CSR நிதியில் பெறப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்களை தொடங்கி வைத்தார். மேலும், "My Hospital" QR குறியீடு செயலியையும் தொடங்கி வைத்தார்.

30 ஜூன், 2026PR #314

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

28 ஜூன், 2026PR #303

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்.

23 ஜூன், 2026PR #269

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களில் மிக முக்கியமான திட்டமான "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்", அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக வடிவமைக்கப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

20 மே, 2026

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கித் தொடங்கி வைத்தார்.

15 மே, 2026

3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் செவிலியர் உதவியாளர் நிலை - II பணிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், 3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவத் துறையில் செவிலியர் உதவியாளர் நிலை - II பணிக்கான 31 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்குத் தகுதி அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படும்.

8 மே, 2026

தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மனநல ஆலோசனை சேவை, 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் வழங்கப்படுகிறது.