#Transparency
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Transparency குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் கருத்துக்கள் பெற பல்வேறு சங்கப் பிரதிநிதிகளோடு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் கனிம கடத்தலைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வரலாற்றில் முதல் முறையாக 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) வழங்கப்பட்டதால் மின்வாரிய பொறியாளர்கள் மகிழ்ச்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.C.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்களாக (மின்னியல்) பணியில் சேர்ந்தவர்களுக்கு, முதற்கட்டமாக 300 செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை மின்வாரிய பொறியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வுக்கூட்டம்: மக்கள் நலன் மற்றும் திறமையான சேவை வழங்கலை அமைச்சர் திருமதி.செ.கமலி வலியுறுத்தினார்
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், துறையின் தற்போதைய செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் சேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. கால்நடை மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு, இத்துறையின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தி, மக்கள் நலனை முதன்மைப்படுத்தி நேர்மையுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆட்சியில் தனிநபர்/ ஒரு நிறுவனத்திற்கு மட்டும் மின் வாரிய முக்கிய பணிகள் - ஒப்பந்தாரர்கள் புகார். இனிவரும் காலங்களில் வெளிப்படையான நிர்வாகத்தின் அடிப்படையில் தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பணிகள் வழங்கப்படும் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் உறுதி.
இன்று (25.05.2026) சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரண விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்கள் உள்ளிட்ட சுமார் 1000 பேருடன் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முறைகேடுகள் தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மனிதவள மேலாண்மைத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கவும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை.
சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய உரை. இதில், அவர் மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்தார்.