TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

வரலாற்று அஞ்சலி

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

விரிவான சுருக்கம்

நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் அவர்கள் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன. கல்வி வளர்ச்சிக்கான அவரது அக்கறை, மக்கள் நலன் சார்ந்த நிர்வாகப் பார்வை ஆகியவை இன்றும் வழிகாட்டும் உயரிய மரபுகளாகத் திகழ்கின்றன. பனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்!

Archive navigation

Newer
உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) – ஐஐடி, சென்னை (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
Older
மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கோ.க. அருண்ராஜ் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதார சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கான "நலம்AI" என்ற உரையாடலுடன் கூடிய செயலியை அறிமுகப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, அலைபேசி சார்ந்த மருத்துவப் பயனாளர் சேவைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் வழங்கப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்