போக்குவரத்துத்துறை
RTO சேவைகள், ஓட்டுநர் உரிமம், அரசு பேருந்து போக்குவரத்து (TNSTC) மற்றும் மெட்ரோ ரயில் கொள்கைகள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக 250 புதிய பேருந்துகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.290.08 கோடி செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார். இதில் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 120 புதிய பேருந்துகளும் அடங்கும்.
மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்து மற்றும் இதர பொருந்தக்கூடிய வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (Vehicle Location Tracking Device - VLTD)கட்டண நிர்ணயம் -தொடர்பானசெய்திகுறிப்பு
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து மற்றும் இதர பொருந்தக்கூடிய வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (VLTD) கட்டண நிர்ணயம் தொடர்பாக, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு சீரான மற்றும் நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்னணு இயந்திரம் (ETM) மூலம் வழங்கப்படும் பயணச்சீட்டு அச்சிடுவதற்கான காகிதச் சுருள் (Paper Roll) கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான மின்னணு பயணச்சீட்டு இயந்திர (ETM) காகிதச் சுருள்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இக்காகிதச் சுருள்களின் பின்புறத்தில் விளம்பரங்கள் அச்சிடப்படுவதன் மூலம், கழகங்களுக்கு காகிதச் சுருள்கள் இலவசமாக வழங்கப்படும், இதனால் செலவுகள் குறைக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கும்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்
போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.விஜய் தமிழன் பார்த்திபன் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மீதான புகார்கள் குறித்து ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு கதவுகள், முதலுதவிப் பெட்டி மற்றும் அவசர உதவி எண்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார்.
போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய புள்ளிவிவரங்கள், நலத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று (08.06.2026) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு.
மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
முதலமைச்சர் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல், வருவாயை உயர்த்துதல் மற்றும் பேருந்துகளை நவீனமயமாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் மாநகரப் போக்குவரத்து கழகம் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பை காணாமல் போனது மற்றும் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிறுத்தாமல் சென்றது குறித்த இரண்டு பொதுமக்கள் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன், விழுப்புரம் பணிமனையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் சைதாப்பேட்டை - கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து வழித்தட ஆய்வு மற்றும் வேளச்சேரி பணிமனை ஆய்வு.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் சைதாப்பேட்டை முதல் கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்தில் பயணம் செய்து பொது மக்களுடனும், ஓட்டுநர் நடத்துநர்களுடனும் கலந்துரையாடினார். மேலும், வேளச்சேரி அரசு மத்திய தானியங்கி பணிமனையை ஆய்வு செய்தார்.
மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS–140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.