TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்ட பாரம்பரிய இடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் அரசு செய்திக் குறிப்புகள்.

9 செப்., 2026PR #633

கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட இளம் கலைஞர்களுக்கான மாநில கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் கலைஞர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் 09.09.2026 அன்று பரிசுகள் வழங்கி பாராட்டினார். இப்போட்டிகள் 08.09.2026 அன்று நடைபெற்றன.

27 ஆக., 2026PR #585

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.164.64 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 127 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 36 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 164 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

13 ஆக., 2026PR #529

அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்ப்பு

அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 5 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு, 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

4 ஆக., 2026PR #492

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 274 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைக் கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

24 ஜூன், 2026PR #275

கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில், கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், இன்று (24.6.2026) சென்னை, தியாகராய நகர், கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

12 மே, 2026

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.