அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சமீபத்திய செய்திகள், செய்தி வெளியீடுகள், திட்டங்கள் மற்றும் வளர்ச்சி அறிவிப்புகள்.
விதி 110-ன் கீழ் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை குறித்த முதலமைச்சரின் அறிவிப்புகள்
முதலமைச்சர் சுகாதாரத் துறையில் பல புதிய முன்முயற்சிகள் மற்றும் மேம்பாடுகளை அறிவித்தார், இதில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை உயர்வு, புதிய மருத்துவ வசதிகள், மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிப்பு மற்றும் விரிவான புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் ஆகியவை அடங்கும்.
சென்னை-ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை திறந்து வைத்தார். இத்தடகளம் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தேசிய, பன்னாட்டு தரத்திற்கு இணையான பயிற்சி வசதிகளை அளிக்கும் நோக்கில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும் இச்செய்தி வெளியீடு விவரிக்கிறது.
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 274 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைக் கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ. 28 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 விளையாட்டு அரங்கள் மற்றும் மைதானங்களை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா திறந்து வைத்து 5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்
சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ. 28 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 விளையாட்டு அரங்கள் மற்றும் மைதானங்களை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா திறந்து வைத்து 5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரியலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல், கனிமவள திட்டப்பணிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவினை தொடங்கி வைத்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, கனிமவள அறக்கட்டளை நிதி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்
உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.