பழம்பெரும் நடிகை திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
விரிவான சுருக்கம்
திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும். திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
முக்கிய அறிவிப்புகள்
- 1பழம்பெரும் நடிகை திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவிற்கு முதலமைச்சர் ஆழ்ந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தெரிவித்தார்.
- 2திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணியை பாராட்டினார்.
- 3தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிப் படங்களில் நடித்த அவரது சாதனைகளை எடுத்துரைத்தார்.
- 4பத்மஸ்ரீ, கலைமாமணி, நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றதை குறிப்பிட்டார்.
- 5அவரது மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பு என்று கூறினார்.
- 6அவரது குடும்பத்தினர், உறவினர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்தார்.