TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Child Safety

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Child Safety குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

7 ஜூலை, 2026PR #355

போக்குவரத்துத் துறை அமைச்சர் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்

போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.விஜய் தமிழன் பார்த்திபன் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மீதான புகார்கள் குறித்து ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு கதவுகள், முதலுதவிப் பெட்டி மற்றும் அவசர உதவி எண்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார்.

29 ஜூன், 2026PR #309

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்:

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உரையாற்றினார், வெளிப்படையான, நேர்மையான, இலஞ்ச லாவண்யமற்ற நிர்வாகம், உடனடி மக்கள் சேவை, பாரபட்சமற்ற சட்டம் ஒழுங்கு, அடிப்படை வசதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வலியுறுத்தினார்.

25 மே, 2026

செய்தி வெளியீடு: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்குற்றச் செயலுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தண்டனையை வரவேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இரட்டை தூக்குத் தண்டனை விதித்த தீர்ப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வரவேற்றுள்ளார்.

25 மே, 2026

கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.