#Injury
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Injury குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்த விபத்தில் திருமதி சின்னபொண்ணு (வயது 55) என்பவர் உயிரிழந்தார். இவ்விபத்தில் காயமடைந்த திருமதி சகுந்தலா (வயது 25) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இரங்கல் செய்தி
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் ஆழத்தினை அதிகப்படுத்தும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு நரசிங்க பேட்டை கிராமத்தை சார்ந்த திரு.ரா.பாலு அவர்கள் உயிரிழந்த செய்திக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்துள்ள திரு. ரா.மருதவாணன் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.