#Irrigation
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Irrigation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தாமிரபரணி நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 36,521 ஏக்கர் நிலங்கள் கார் பருவ சாகுபடிக்கு பயனடைய பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து 121 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து 94,521 ஏக்கர் நிலங்களுக்கு 36 நாட்களுக்கு பாசன நீர் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் திரு.ர.வினோத் ஆய்வு செய்தார்.
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் 06.06.2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், முழலை கிராமத்தில் அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள 4 கால்வாய்களின் கீழுள்ள 10265 ஏக்கர் நேரடி பாசனப்பரப்பு நிலங்களுக்கு, கார் பருவ சாகுபடிக்கு 01.06.2026 முதல் 02.10.2026 வரை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டப் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து 01.06.2026 முதல் 28.02.2027 வரை தண்ணீர் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது.