#Thanjavur
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Thanjavur குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் திரு.ர.வினோத் ஆய்வு செய்தார்.
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் 06.06.2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், முழலை கிராமத்தில் அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இரங்கல் செய்தி
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் ஆழத்தினை அதிகப்படுத்தும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு நரசிங்க பேட்டை கிராமத்தை சார்ந்த திரு.ரா.பாலு அவர்கள் உயிரிழந்த செய்திக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்துள்ள திரு. ரா.மருதவாணன் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் மாநகரப் போக்குவரத்து கழகம் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பை காணாமல் போனது மற்றும் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிறுத்தாமல் சென்றது குறித்த இரண்டு பொதுமக்கள் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன், விழுப்புரம் பணிமனையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், புதுப்பட்டினம் கிராமம் சாந்தபிள்ளை கேட் அருகில் உள்ள தனியார் உணவகத்தில் 18.05.2026 அன்று குளிரூட்டி (Air conditioner) பழுது செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு தனியார் உணவகத்தில் ஏசி பழுதுபார்க்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₹3 லட்சம், கடுமையான காயமடைந்த நான்கு பேருக்கு தலா ₹1 லட்சம் மற்றும் லேசான காயமடைந்த ஒருவருக்கு ₹50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.