TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Water Management

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Water Management குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

12 ஜூன், 2026PR #218

குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவித்து நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026-ஆம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

6 ஜூன், 2026PR #186

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அமைச்சர் திரு.ர.வினோத் ஆய்வு செய்தார்.

மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் 06.06.2026 அன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், முழலை கிராமத்தில் அரசலாறு நீர்வழிதடத்திலுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மற்றும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

5 ஜூன், 2026PR #174

உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூக வலைதளப் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியுள்ளார்.

30 மே, 2026

கன்னியாகுமரி மாவட்டப் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து 01.06.2026 முதல் 28.02.2027 வரை தண்ணீர் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது.

26 மே, 2026

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. தமிழக உறுப்பினர் கர்நாடகாவிலிருந்து பெறப்பட்ட கூடுதல் நீரை அங்கீகரிக்க மறுத்து, தமிழகத்திற்கான பங்கை பில்லிகுண்டுலுவில் உறுதி செய்ய வலியுறுத்தினார்.

24 மே, 2026

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (24.05.2026) காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு திட்டம் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

20 மே, 2026

விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.