ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை மற்றும் மேம்பாட்டு திட்டங்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் பயன்பெற அழைப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2023 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி - செய்தி வெளியீடு
2025-26 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மாணக்கர்களின் தேர்ச்சி விகிதம் 91.42 சதவீதமாகவும், இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். மேலும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 96.66 சதவீத தேர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டை விட மூன்று சதவீதம் அதிகமாகும், இது மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதமான 94.31 சதவீதத்தினை காட்டிலும் அதிகமாகும்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் - 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம், 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களை ஆதிதிராவிடர், மதம்மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து வரவேற்கிறது.