தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
TNeGA மின்-ஆளுமை சேவைகள், இணைய சேவைகள், ஸ்டார்ட்அப் முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு.
தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி'
தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் பயிற்சி'யை வரும் 15.06.2026 முதல் 19.06.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்த உள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் (ம) சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னையில் 2026ஆம் ஆண்டுக்கான கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் தொடர்பான கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை சூன் 15ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு நடத்துகிறது. இப்பயிற்சியில் சுவடிகள் பாதுகாப்பு, படியெடுத்தல், பதிப்பித்தல் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 10.06.2026.
மூன்று நாள் "இ-காமர்ஸ்" பயிற்சித் திட்டம்
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), சென்னை, ஜூன் 16 முதல் 18, 2026 வரை மூன்று நாள் "இ-காமர்ஸ்" பயிற்சித் திட்டத்தை அதன் சென்னை வளாகத்தில் நடத்தவுள்ளது. இந்தப் பயிற்சித் திட்டம் தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) இ-காமர்ஸ் அல்லது நேரடி நுகர்வோர் (D2C) வணிகங்களைத் தொடங்குவது, கட்டமைப்பது மற்றும் விரிவுபடுத்துவது பற்றிய திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி "
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ஜூன் 15 முதல் ஜூன் 19, 2026 வரை ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி”யை நடத்துகிறது.
"நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்" - 5 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
சென்னை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், "நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்" என்ற தலைப்பில் 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை 2026 ஜூன் 15 முதல் ஜூன் 19 வரை நடத்தவுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை – அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (Five Years Integrated P.G. M.A. in Tamil) மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு (M.A. Tamil) ஆகிய படிப்புகளுக்கான 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ.எம்.ஷாஜஹான் அவர்களின் தலைமையில் இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் தலைமையில் 25.05.2026 அன்று நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் தலைமையில் 25.05.2026 அன்று நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆன்லைன் டிக்கெட், கூட்ட மேலாண்மை, திருக்கோயில் பாதுகாப்பு, நிலப்பிரச்சினைகள், நலத்திட்டங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
திருக்கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அலுவலர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்திட வேண்டும்; ஆய்விற்கு பின், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் உத்தரவு மற்றும் யானை அகிலாவுக்கு 24வது பிறந்தநாள் விழா.
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள முக்கிய திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு, பிரசாத விற்பனை நிலையங்கள், பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், FSSAI விதிமுறைகளை கட்டாயமாக்க உத்தரவிட்டார். யானை அகிலாவின் 24வது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்றார்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் ஆய்வு
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்கள் இன்று (23.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அன்னதானத் திட்டத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வில் பசுமை எரிசக்தி கழகத்தின் ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தெரியவந்தது. இதன் காரணமாக திரு. வி. காசி மற்றும் திரு. பி. சந்திரசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஓய்வு பெற்ற இயக்குநர் திரு. எஸ். மங்களநாதனின் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
சென்னை, அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், 2026-2027 கல்வியாண்டிற்கான பல்வேறு தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2026 மே 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.