தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
வேலைவாய்ப்பு அலுவலக தகவல்கள், TNSDC திறன் பயிற்சி திட்டங்கள், தொழிலாளர் நல வாரிய உதவிகள்.
குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் உறுதி
உலக அளவில் அனுசரிக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறையின் சார்பாக இன்று 12.06.2026 சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டது. மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, செனாய் நகர், அம்மா அரங்கத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதி அளித்தார்.
மாண்புமிகு அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வை துவக்கி வைத்து சேர்க்கை ஆணைகளை வழங்கினார்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான கணினிமயமாக்கப்பட்ட சேர்க்கை முறையை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் மற்றும் இலவச கல்விப் பொருட்களை வழங்கினார்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென புதிய இணையதளம் தொடக்கம்
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் அவர்களால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென முதல் முறையாக பிரத்தியோக இணையதளம் (https://tils.tn.gov.in/) தொடங்கப்பட்டது.
அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ், சென்னையில் உள்ள தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய அலுவலகத்தை ஆய்வு செய்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 100 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.