TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

துறை வாரியான அறிவிப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

வேலைவாய்ப்பு அலுவலக தகவல்கள், TNSDC திறன் பயிற்சி திட்டங்கள், தொழிலாளர் நல வாரிய உதவிகள்.

27 ஜூலை, 2026PR #447

மாண்புமிகு அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை துவக்கி வைத்தார்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில், "சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் துவக்கி வைத்தார்.

22 ஜூலை, 2026

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த திறனாய்வுக் கூட்டம்

சென்னை கிண்டியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திறனாய்வுக் கூட்டத்தில், தொழிலாளர் பாதுகாப்பு, நலன் மற்றும் வெளிப்படையான ஆய்வுகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.

1 ஜூலை, 2026PR #320

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக் கூட்டம்

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜா. முகமது பர்வேஸ் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்ட நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம், மனுக்களுக்கு விரைவான தீர்வு, நிலுவை இன்றி செயல்படுதல், கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த நடவடிக்கை போன்ற முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

22 ஜூன், 2026

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் இன்று (22.06.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து குறித்து சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கை

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பெண்கள் உயிரிழந்தனர். முதலமைச்சர் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

12 ஜூன், 2026PR #221

குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் உறுதி

உலக அளவில் அனுசரிக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறையின் சார்பாக இன்று 12.06.2026 சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டது. மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, செனாய் நகர், அம்மா அரங்கத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதி அளித்தார்.

9 ஜூன், 2026

மாண்புமிகு அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான கலந்தாய்வை துவக்கி வைத்து சேர்க்கை ஆணைகளை வழங்கினார்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான கணினிமயமாக்கப்பட்ட சேர்க்கை முறையை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் மற்றும் இலவச கல்விப் பொருட்களை வழங்கினார்.

3 ஜூன், 2026PR #161

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென புதிய இணையதளம் தொடக்கம்

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் அவர்களால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென முதல் முறையாக பிரத்தியோக இணையதளம் (https://tils.tn.gov.in/) தொடங்கப்பட்டது.

2 ஜூன், 2026

அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ், சென்னையில் உள்ள தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய அலுவலகத்தை ஆய்வு செய்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 100 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.