பொதுத்துறை
முதலமைச்சர் அலுவலக அறிவிப்புகள், நெறிமுறைகள் மற்றும் முக்கிய நிர்வாக உத்தரவுகள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026 – வாக்கு எண்ணிக்கை நிறைவு.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 62 வாக்கு எண்ணும் மையங்களில் மே 4, 2026 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்டு, விவிபிஏடி சீட்டுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டன.
தமிழ்நாடு மருத்துவ துணை சேவையில் செவிலியர் உதவியாளர் நிலை II பதவிகளை 3% இட ஒதுக்கீடு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்புதல்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு மருத்துவ துணை சேவையில் செவிலியர் உதவியாளர் நிலை II பதவிகளுக்கு 3% விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 31 காலியிடங்களை நிரப்ப ஆன்லைன் விண்ணப்பங்களை அழைக்கிறது. தகுதி பெற, கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட சர்வதேச, தேசிய அல்லது மாநில அளவிலான மூத்த போட்டிகளில் பங்கேற்று, வயது மற்றும் கல்வித் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் வில்லிவாக்கம் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று (14.05.2026) நடைபெற்றது.
பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கடிதம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வால் நெருக்கடியைச் சந்திக்கும் மாநில ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில், பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு 14.05.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.01.2026 முதல் 60 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 01.01.2026 முதல் 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.