TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்ட கடல்சார் வளங்கள், மானாவாரி விவசாயம் மற்றும் மக்கள் நல திட்டங்கள்.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

21 மே, 2026

ஜப்பானில் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு

ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டம் - JFY 2026 என்ற சர்வதேச அறிவியல் பரிமாற்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

12 மே, 2026

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும் உடனடி தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே சிறையில் உள்ள 54 மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 264 படகுகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 மே, 2026

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.