TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்ட கடல்சார் வளங்கள், மானாவாரி விவசாயம் மற்றும் மக்கள் நல திட்டங்கள்.

12 மே, 2026

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும் உடனடி தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே சிறையில் உள்ள 54 மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 264 படகுகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 மே, 2026

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.