Dheeraj Kumar
Dheeraj Kumar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் 'போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' பிரச்சாரம் துவக்கம், உறுதிமொழி ஏற்பு மற்றும் காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கல்
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 'போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடங்கி வைத்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் அழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் மற்றும் சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள், தன்னார்வலர் குழுக்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இன்று (06.08.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.274.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 274 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைக் கட்டடங்கள், திறன்மிகு மையங்களுக்கான பணிமனைகள், நூலகங்கள், மின்னணு நூலகங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.