Thiru N Anand
Thiru N Anand தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அன்னாரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இன்று (22.08.2026) சென்னை அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 283 தனியார் துறை நிறுவனங்களும் 10 திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன. 9671 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர், இதில் 2973 நபர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது.