பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
விரிவான சுருக்கம்
“ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும்” என்ற உயரிய கனவை நனவாக்க, தனது வாழ்நாளையே கல்விக்காக அர்ப்பணித்து ஆயிரக்கணக்கான புதிய பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி, ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வியின் கதவுகளைத் திறந்தார். அதன் விளைவாக பள்ளிகளில் மாணவர்சேர்க்கை உயர்ந்து, இடைநிற்றல் விகிதம் குறைந்தது. அத்தகைய கல்விப் புரட்சியை நினைவுகூரும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், செய்தி மக்கள் தொடர்புத் துறை "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் பல்வேறு சிறப்புப் போட்டிகளை நடத்தவுள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
- 1வினாடி வினாப் போட்டி
- 2இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டி
- 3காட்சிப் பலகை / ஓவியம் / புகைப்படப் போட்டி
- 4AI Prompt உருவாக்கம்
- 5தனித்திறமைப் போட்டி (Special Talent Short Video)
- 6குறும்படப் போட்டி (Short Film)