TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Awareness

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Awareness குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

11 ஆக., 2026PR #523

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் 'போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' பிரச்சாரம் துவக்கம், உறுதிமொழி ஏற்பு மற்றும் காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கல்

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 'போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு' பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைத் தொடங்கி வைத்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் அழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் மற்றும் சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள், தன்னார்வலர் குழுக்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

3 ஜூலை, 2026PR #337

'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று கடைபிடிக்கப்பட்டது

'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர் மற்றும் கோயம்பேட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

29 ஜூன், 2026

தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள "கூட்டுறவு வாரம்-2026"-ஐ மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (29.06.2026) கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (29.06.2026) சென்னை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் "கூட்டுறவு வாரம்-2026"-ஐ கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வருகின்ற 29.06.2026 முதல் 06.07.2026 வரை மாநிலம் முழுவதும் "கூட்டுறவு வாரம்" மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது.

12 ஜூன், 2026PR #221

குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் உறுதி

உலக அளவில் அனுசரிக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் தொழிலாளர் துறையின் சார்பாக இன்று 12.06.2026 சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டது. மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, செனாய் நகர், அம்மா அரங்கத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவர் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என உறுதி அளித்தார்.