#Cauvery Water Dispute
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Cauvery Water Dispute குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில் மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) உத்தரவுகளின்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாத நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மீறுவதாகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டு மாண்புமிகு இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.