TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Government Meeting

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Meeting குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

6 ஜூலை, 2026PR #342

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தலைமையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் விலைக் கண்காணிப்பு பிரிவு ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் தலைமையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க விலைக் கண்காணிப்பு பிரிவு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

1 ஜூலை, 2026PR #320

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக் கூட்டம்

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜா. முகமது பர்வேஸ் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்ட நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம், மனுக்களுக்கு விரைவான தீர்வு, நிலுவை இன்றி செயல்படுதல், கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த நடவடிக்கை போன்ற முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

11 ஜூன், 2026PR #215

கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் கருத்துக்கள் பெற பல்வேறு சங்கப் பிரதிநிதிகளோடு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் கனிம கடத்தலைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

10 ஜூன், 2026PR #204

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், நகர் ஊரமைப்பு திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வரன்முறைப்படுத்துதல் குறித்த பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

9 ஜூன், 2026

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு. கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் அவர்கள் பேரிடர் மேலாண்மை துறையின் 2026 மாநில வெப்ப செயல் திட்டத்திற்கான புத்தகத்தை வெளியிட்டார்.

6 ஜூன், 2026PR #187

மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கழிவுநீர் வெளியேற்று திட்டங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், ஹார்ட் டிஸ்க் திருட்டு குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

27 மே, 2026

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் பால்வளத்துறையின் ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் இன்று 27.05.2026 தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறையின் நிர்வாகப் பிரிவு, நிதி பிரிவு, விற்பனைப் பிரிவு, திட்டமிடுதல் பிரிவு, கொள்முதல் பிரிவு, பொறியியல் பிரிவு, தர உறுதி பிரிவு, அம்பத்தூர் சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட இதர பிரிவுகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

26 மே, 2026

சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ.எம்.ஷாஜஹான் அவர்களின் தலைமையில் இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

26 மே, 2026

கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வுக்கூட்டம்: மக்கள் நலன் மற்றும் திறமையான சேவை வழங்கலை அமைச்சர் திருமதி.செ.கமலி வலியுறுத்தினார்

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், துறையின் தற்போதைய செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் சேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. கால்நடை மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு, இத்துறையின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தி, மக்கள் நலனை முதன்மைப்படுத்தி நேர்மையுடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்ற அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

22 மே, 2026

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS-140 VLTD பொருத்தும் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் பயணிகள் வாகனங்கள் மற்றும் Public Service Vehicles-களில் AIS–140 VLTD பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், லாரி உரிமையாளர் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாக இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

21 மே, 2026

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

21.05.2026 அன்று மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் தலைமையில் மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தரமான மருத்துவ சேவைகள் வழங்குதல், 'காயகல்ப்' சான்றிதழ் ஆய்வுகளை விரைவுபடுத்துதல், நிலுவையிலுள்ள 8000 தனியார் மருத்துவமனை CEA உரிமங்களை வழங்குதல் மற்றும் கிட்னி முறைகேடு தொடர்பான விசாரணையை விரைந்து முடித்தல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

18 மே, 2026

முதலமைச்சர் எரிசக்தித் துறை செயல்பாடுகள் மற்றும் எதிர்காலக் கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்தார்

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் எரிசக்தித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் செயல்பாடுகள், எதிர்காலக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் போன்ற முக்கிய நலத்திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.