#Health
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Health குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-ll) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி மதிப்பிலான மருத்துவக் கட்டடங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அமைச்சர் ப.வெங்கடரமணன் மயிலாப்பூர் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்.
நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனம் துவக்கம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் மற்றும் கே.வி.ஜி.டிரஸ்ட் இணைந்து உருவாக்கிய மார்பகப் புற்றுநோய் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனத்தை துவக்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கித் தொடங்கி வைத்தார்.