#Inauguration
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Inauguration குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
சென்னை மாவட்டத்தில் கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார்
முதலமைச்சரின் உத்தரவுப்படி, சென்னை மாவட்டத்தில் பாடிக்குப்பம் அருகே கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் அருகே ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார். இது நீர் ஓட்டத்தை மேம்படுத்தி வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தைத் திறந்து வைத்து, தமிழ்நாடு முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, வியாசர்பாடி மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.07.2026) சென்னையில், புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் திறந்து வைத்து, 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, வியாசர்பாடி மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ள "கூட்டுறவு வாரம்-2026"-ஐ மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (29.06.2026) கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜ் அவர்கள் இன்று (29.06.2026) சென்னை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் "கூட்டுறவு வாரம்-2026"-ஐ கூட்டுறவு கொடி ஏற்றி துவக்கி வைத்தார். இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, வருகின்ற 29.06.2026 முதல் 06.07.2026 வரை மாநிலம் முழுவதும் "கூட்டுறவு வாரம்" மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ. 28 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 விளையாட்டு அரங்கள் மற்றும் மைதானங்களை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா திறந்து வைத்து 5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்
சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ. 28 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 விளையாட்டு அரங்கள் மற்றும் மைதானங்களை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா திறந்து வைத்து 5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்
விருதுநகர் மாவட்டத்தில் கனிம வள அறக்கட்டளை நிதியின் மூலம் ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மானகசேரி கிராமத்தில், மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு திறந்து வைத்தார். மேலும், மாவட்டத்தில் கூடுதலாக 50 அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.